புதுச்சேரி, பிப். 17: உறவினர்களால் கைவிடப்பட்டு ரோட்டில் வீசப்பட்ட முதியவருக்கு உணவு வழங்கி பாதுகாப்பாக காப்பகத்தில் போலீசார் சேர்த்தனர். புதுவை பெரியார்நகர் முல்லை நகர் குடிசை மாற்று வாரியம் அலுவலகம் அருகே நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணியளவில் 75 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாலையில் கிடந்தார். அந்த வழியாக வாகனத்தில் ஏற்றிவந்த உறவினர்கள், அவரை அங்கு வீசி விட்டு சென்றுள்ளனர். வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவால் அவரால் எழுந்திருக்க முடியாமல் அவதிப்பட்டார். 2, 3 முறை எழுந்து விழுந்ததால் அவருக்கு முகத்தில் அடிப்பட்டு ரத்தம் வந்தது.