காஞ்சிபுரம், பிப். 17: சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் முஸ்லிம்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர்.இதைக்கண்டித்து பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் காஞ்சிபுரம் பெரியார் நினைவு தூண் அருகில் போராட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், கூட்டமைப்பு தலைவர் பாசறை செல்வராஜ் தலைமை தாங்கினார்.