திண்டுக்கல், பிப். 11: வேடசந்தூர் அருகே சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி எஸ்பியிடம் மனு அளிக்கப்பட்டது. ஆத்தூர் தாலுகா, கும்மம்பட்டி பகுதியை சேர்ந்த நாகேந்திரன் திண்டுக்கல் மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு நேற்று வந்தார். அவர் எஸ்பி சக்திவேலிடம் ஒரு மனு அளித்தார். அதில், ‘வேடசந்தூர் தாலுகா, ரெங்கநாதபுரத்தில் உள்ள தனியார் மில்லில் நானும், எனது மனைவியும் வேலை செய்து வருகின்ற காரணத்தால் கடந்த 10 வருடங்களாக ராமநாதபுரத்தில் உள்ள கட்டபொம்மன் என்பது வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தோம். கடந்த 2.2.20ம் தேதி காலை எனது மனைவி வேலைக்கு சென்று விட்டார். எனக்கு இரவு வேலை என்பதால் நான் வீட்டில் இருந்தேன். எனது மகள் காலை 8.30 மணிக்கு அழகுமணி மகன் அய்யப்பன் வீட்டிற்கு டிவி பார்த்து விட்டு வருவதாக சொல்லி விட்டு சென்றாள். மீண்டும் 11.30 மணி அளவில் எனது வீட்டிற்கு திரும்பி வந்து சாப்பிட்டு விளையாட செல்வதாக கூறி சென்றாள்.
