தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

ஈரோடு, ஜன.31: ஈரோட்டில் தேசிய தொழுநோய் ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. நாடு முழுவதும் ஜன.30ம் தேதி காந்தி நினைவு தினத்தன்று தேசிய தொழுநோய் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஈரோட்டில் தொழுநோய் ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. இந்த ஊர்வலத்திற்கு ஈரோடு சுகாதார பணிகள் இணை இயக்குநர் கோமதி தலைமை தாங்கினார். துணை இயக்குநர் ரமாமணி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் கதிரவன் கலந்து கொண்டு ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த ஊர்வலம், ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள காலிங்கராயன் விருந்தினர் மாளிகையில் துவங்கி கலெக்டர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. ஊர்வலத்தில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்தியபடி, கோஷம் எழுப்பியவாறு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Related Stories: