காஞ்சிபுரம், ஜன.28: திருமுக்கூடல் மேம்பாலத்தில் 81 லட்சம் மதிப்பில் சாலை சீரமைக்கும் பணி துவங்கப்பட்டது. உத்திரமேரூர் அடுத்த திருமுக்கூடல் மேம்பால சாலை மற்றும் ரவுண்டானா பகுதியில், அதிகளவில் கனரக வாகனங்கள் செல்வதால், மிகவும் சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்று ஆனது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.
அதன்பேரில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி 45 லட்சம், எம்பி மேம்பாட்டு நிதி ₹36 லட்சம் என மொத்தம் 81 லட்சத்தில் திருமுக்கூடல் பால சாலை மற்றும் ரவுண்டானா ஆகியவை சீரமைக்கும் பணி நேற்று துவங்கியது.