அமிர்தானந்தமயி மடத்தில் பஜனை

திருப்பரங்குன்றம், ஜன.24: திருப்பரங்குன்றம் அருகில் மூலக்கரை மாதா அமிர்தானந்தமயி மடத்தில் உள்ள பிரம்மஸ்தான ஆலயத்தில் நேற்று 25வது ஆண்டு விழா துவங்கியது. இரண்டாவது நாளாக இன்றும் விழா நடைபெறவுள்ளது. இந்த இரு தினங்களிலும் சத்சங்கம், பஜனை, தியானம் மற்றும் தரிசனம் நடைபெறும். முதல் நாளான நேற்று மாதா அமிர்தானந்தமயி அம்மா கலந்து கொண்ட சத்சங்கம், பஜனை, தியானம் ஆகியவை நடைபெற்றது. இறுதியில் அம்மாவின் தரிசனம் நடைபெற்றது. விழாவில் முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணன், அருப்புக்கோட்டை ராமலிங்கா மில்ஸ் டி.ஆர்.தினகரன், ராமகிருஷ்ண தபோவனத்தை சேர்ந்த பரமானந்தா சுவாமி, சிவானந்தா தபோவனத்தை சேர்ந்த ஸ்வருபானந்தா, மகாத்மா பள்ளி தலைவர் பன்னீர்செல்வம், பிரேமலதா, அமிர்தா ஸ்டோர்ஸ் தலைவர் பிரபாகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

Related Stories: