பஸ் மோதி முதியவர் பலி

மதுரை தெப்பக்குளம் ஞானவேல் காலனியை சேர்ந்தவர் பூமிநாதன்(60). இவர் எல்கேடி நகர் விரகனூர் ரோடு தனியார் பொறியியல் கல்லூரி அருகே நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவ்வழியாகச் சென்ற அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பூமிநாதனின் மனைவி லலிதா கொடுத்த புகாரின் பேரில், சிலைமான் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

The post பஸ் மோதி முதியவர் பலி appeared first on Dinakaran.

Related Stories: