கோவை, ஜன.22: கோவையில் ரூ.4 லட்சம் மோசடி புகாரில் ரியல் எஸ்டேட் பிரமுகர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை பீளமேடு பாலன் நகரை சேர்ந்தவர் விஜயகுமார் (42). இவர் கோவை பீளமேடு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:- கோவை காந்திபுரத்தில் அலுவலகம் நடத்தி வரும் ரியல் எஸ்டேட் பிரமுகர் செந்தில்குமார் என்பவர் கடந்த 2013ம் ஆண்டு அன்னூர் அருகேயுள்ள கணுவாய் கிராமத்தில் வீட்டுமனைகள் லே-அவுட் செய்திருப்பதாகவும், அம்மனைகளை மாத தவணைக்கு வாங்குமாறு என்னிடம் தெரிவித்தார். நானும் அவரை நம்பி செந்தில்குமாரின் கூட்டாளி ஈஸ்வரன் என்பவரிடம் ரூ.20 ஆயிரத்துக்கான காசோலையை கொடுத்தேன். இதனைத்தொடர்ந்து 2 மனைகள் ஒதுக்கி இருப்பதாகவும், மாத தவணையாக ரூ.7,550 வீதம் 36 மாதங்களுக்கு ரூ.2,91,800 செலுத்த வேண்டும் என கூறி கிரைய ஒப்பந்தம் செய்து கொடுத்தனர். ஈஸ்வரன் கூறிய கிருஷ்ணமூர்த்தி என்பவர் மாதாமாதம் தவணை தொகையை பெற்று ரசீது கொடுத்து செல்வார்.