இலவச கண் பரிசோதனை முகாம்

கோவில்பட்டி, ஜன.21: கோவில்பட்டியில் புத்துயிர் ரத்ததான கழகம், கிருஷ்ணன்கோவில் சங்கரா கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. கோவில்பட்டி ஏ.வி.துவக்கப்பள்ளியில் நடந்த முகாமிற்கு ஐந்தாவது தூண் அமைப்பு நிறுவனர் சங்கரலிங்கம் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் லட்சுமணன், செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புத்துயிர் ரத்ததான கழக செயலாளர் தமிழரசன் வரவேற்றார். கிருஷ்ணன் கோவில் சங்கரா கண் மருத்துவமனை டாக்டர் முத்துலட்சுமி தலைமையிலான மருத்துவ குழுவினர் கண் நோயாளிகளுக்கு பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர். முகாமில் 80க்கும் மேற்பட்டோருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. மாவீரன் பகத்சிங் ரத்ததான கழகம் காளிதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: