காரைக்குடி, ஜன.20: காரைக்குடி வித்யாகிரி பள்ளியில் வள்ளுவர் பேரவை சார்பில் வாழ்வியல் நெறியுரைக்கும் வள்ளுவம் என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு மற்றும் நூல் வெளியீட்டு விழா நடந்தது. வள்ளுவர் பேரவை நிறுவனத் தலைவர் செயம்கொண்டான் வரவேற்றார். அழகப்பா பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சுவாமிநாதன் தலைமை வகித்தார். சேதுபாஸ்கரா கல்விக்குழும தலைவர் சேதுகுமணன், சண்முகநாதன் பொறியியல் கல்லூரி தாளாளர் பிச்சப்பா மணிகண்டன் ஆகியோர் கட்டுரையாளர்களுக்கு பரிசு வழங்கினர்.