வேலூர், ஜன.20: வேலூர் அடுத்த நாகநதி கொல்லைமேடு பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார்(37), கார் டிரைவர். இவருடைய மனைவி தீபா(27). தம்பதிக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இருவருக்கும் இடையே குடும்ப பிரச்னை காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் தம்பதிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் தீபாவை, உதயகுமார் தாக்கியதாக தெரிகிறது. இதில் படுகாயமடைந்த தீபா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.