கரூர், ஜன. 20: கரூர் வெங்கமேடு காவல் நிலையத்துக்கு செல்லும் மண்சாலையை தார்ச்சாலையாக மாற்ற தேவையான ஏற்பாடுகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் நகராட்சி பகுதியில் வெங்கமேட்டில் உள்ள வாங்கப்பாளையம் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு காவல் நிலையம் உருவாக்கப்பட்டது. வாடகை கட்டிடத்தில் வெங்கமேடு காவல் நிலையம் செயல்பட்டு வந்த நிலையில் தெற்கு அருகம்பாளையம் பகுதியில் புதிதாக காவல் நிலையம் அமைக்கப்பட்டு திறப்பு விழா காணப்பட்டது. காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரும்பாலான பகுதி சாலைகள் தார்ச்சாலையாக மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், வெங்கமேடு காவல் நிலையத்துக்கு செல்லும் சாலை மட்டும் கடந்த பல ஆண்டுகளாகவே குண்டும் குழியுமாக மண்சாலையாகவே உள்ளது.