கரூர் தாந்தோணிமலையில் ஆரோக்கிய இந்தியா வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

கரூர், ஜன. 19: ஆரோக்கிய இந்தியாவை வலியுறுத்தி சைக்கிள் பேரணி தாந்தோணிமலையில் நடைபெற்றது. கரூர் மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் ஆரோக்கிய இந்தியாவை வலியுறுத்தி இளைஞர்களுக்கான சைக்கிள் பேரணி நடைபெற்றது. கரூர் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ஜெரால்டு பேசுகையில், பாரத பிரதமரின் ஆரோக்கிய இந்தியா திட்டம் குறித்து பேசி கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் ட்ரவின்சார்லஸ்டன், ஜெயப்பிரகாஷ் முன்னிலை வகித்தனர். தாந்தோணிமலை பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து பேரணி துவங்கி கலெக்டர் அலுவலகம் வரை சென்று மீண்டும் ஸ்டேட் வங்கியை அடைந்தது. நேரு யுவகேந்திரா தொண்டர் படையினர் பேரணியில் கலந்து கொண்டனர்.

Related Stories: