நாலுமாவடியில் ரெடீமர்ஸ் கோப்பைக்கான மாநில அளவில் மின்னொளி கபடி போட்டி

நாசரேத், ஜன.14: நாலுமாவடியில் ரெடீமர்ஸ் கோப்பைக்கான மாநில அளவிலான மின்னொளி கபடிபோட்டி 16ம் தேதி தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.தூத்துக்குடி மாவட்டம், நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் விளையாட்டு துறை நடத்தும் 6ம் ஆண்டு ரெடீமர்ஸ் கோப்பைக்கான மாநில அளவிலான மின்னொளி கபடி போட்டி தமிழர் திருநாளை முன்னிட்டு நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வருகிற 16, 17ம் தேதிகளில் மாலை 3 மணிக்கு நடக்கிறது. தொடக்க விழா நிகழ்ச்சிக்கு இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி.லாசரஸ் தலைமை வகிக்கிறார். போட்டி ஒருங்கிணைப்பாளர் மணத்தி கணேசன் முன்னிலை வகிக்கிறார். தமிழகத்தின் தலை சிறந்த ஆண்கள். பெண்கள் அணிகள் பங்கேற்கின்றன. போட்டிகள் சர்வதேச தரத்தில் மேட் தளத்தில் நடக்கிறது. ஆண்கள் பிரிவில் 16 அணிகளும், பெண்கள் பிரிவில் 6 அணிகளும் பங்கேற்கின்றன. போட்டியில் நாக் அவுட் முறையில் நடத்தப்படுகிறது. இதில் பார்வையாளர்கள் 35 பேர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகிறது.  ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவன பொது மேலாளர் செல்வக்குமார், ஊழிய விளையாட்டுத்துறை மணத்தி எட்வின் மற்றும் விளையாட்டுத்துறையினர் செய்து வருகின்றனர்.

Related Stories: