மருத்துவமனையில் கட்டிடம் திறப்பு

சிவகங்கை, ஜன.13:  சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.47 லட்சம் மதிப்பீட்டில் நோயாளிகளின் பாதுகாவலர் தங்கும் விடுதிக்கான புதிய கட்டிட திறப்பு விழா நடந்தது. கலெக்டர் ஜெயகாந்தன் திறந்து வைத்தார். மானாமதுரை எம்எல்ஏ நாகராஜன் முன்னிலை வகித்தார். கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் திறந்து வைத்தார். அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேல், நிலைய மருத்துவ அலுவலர் மீனா, சிவகங்கை நகராட்சி ஆணையர் கார்த்திகேயன்  உட்பட பலர் கலந்து கொண்டனர். 

Related Stories: