மீன்வள துறையில் காலி பணியிடம்

கடலூர், ஜன. 13:கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை மீன்துறை உதவி இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டில் காலியாக உள்ள 2 மீன்வள உதவியாளர் பணியிடங்களுக்கு கீழ்க்கண்ட இன சுழற்சி முறையில் தேர்வு செய்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மீன்வள உதவியாளர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளவர்கள் தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நீச்சல் தெரிந்திருக்க வேண்டும். மீன் பிடிதொழில் தெரிந்தவரும், புதிய வலை பின்னுதல் மற்றும் பழுது பட்ட வலையை பழுது  நீக்கம் செய்ய தெரிந்திருக்க வேண்டும். பரிசல் இயக்க தெரிந்து இருக்க வேண்டும்.

மீன்வளத்துறையின் மூலமாக நடத்தப்பட்ட பயிற்சிகள் தொடர்பான சான்றிதழ் பெற்றுள்ளவருககு முன்னுரிமை வழங்கப்படும் நீச்சல் குளம் அல்லது தகுதியான நீர்நிலைகளில் முதல் நிலை நீச்சல் தொடர்பான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 01.07.2019 பொதுப்பிரிவினருக்கு 30 வயதிற்கு உட்பட்டும், ஆதிதிராவிடருக்கு வயது உச்சவரம்பு 35க்கு மிகாமல் இருக்க வேண்டும்.  விண்ணப்பங்கள் மீன்வளத்துறை, பரங்கிப்பேட்டை, 608 502 என்ற முகவரிக்கு வரும் 25ம் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்கத்தக்க வகையில் அனுப்பப்பட வேண்டும். விண்ணப்ப உறையின் மேல் கடலூர் மாவட்ட மீன்வள உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பித்தல் என எழுதி அனுப்பிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Related Stories: