காஞ்சிபுரம், ஜன.7: காஞ்சிபுரம் மாவட்டம், அரும்புலியூர் ஊராட்சி, பழவேரி கிராமத்தில் அரசு அதிகாரி இல்லாமல் விடப்பட்ட சுண்ணாம்புகுள மீன் ஏலத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன், கலெக்டர் பொன்னையாவிடம் கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது. காஞ்சிபுரம் மாவட்டம், பழவேரி கிராமத்தில் உள்ள சுண்ணாம்புகுளம் மீன் ஏலம் பாஸ்கர் என்பவர் தலைமையில் விடப்படும் என தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டது. அங்கு சென்ற கிராம மக்கள், மீன் ஏலம் அதிகாரிகள் முன்னிலையில்தான் விட வேண்டும் என வலியுறுத்தினார்.