வண்டலூர் உயிரியல் பூங்கா 28ம் தேதி திறந்திருக்கும்

 

கூடுவாஞ்சேரி, மே 25: வருகிற 28ம் தேதி வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என்று பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.அறிவித்துள்ளது. சென்னை அடுத்த வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு சிங்கம், புலி, கரடி, யானை, மான்கள் உள்ளிட்ட பல அரிய வகை விலங்குகளும், ஏராளமான பறவைகளும் உள்ளன. இதனை காண தினந்தோறும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து கண்டுகளித்துவிட்டு செல்வது வழக்கம்.

இந்நிலையில், வருகிற 28ம் தேதி வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து பூங்கா நிர்வாகம் தனது செய்தி குறிப்பில் கூறுகையில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று பூங்கா பராமரிப்பு பணிக்காக பூங்காவிற்கு விடுமுறை விடுவது வழக்கம். இந்நிலையில், மாணவ, மாணவிகளுக்கு மே மாதம் விடுமுறை விடப்பட்டுள்ளதால் வண்டலூர் பூங்காவுக்கு குடும்பத்துடன் வந்து கண்டு களிப்பதற்காக வருகிற 28ம் தேதி செவ்வாய்கிழமை அன்று வண்டலூர் உயிரியல் பூங்கா வழக்கம்போல் திறந்து இருக்கும் என இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

The post வண்டலூர் உயிரியல் பூங்கா 28ம் தேதி திறந்திருக்கும் appeared first on Dinakaran.

Related Stories: