டிரைவருக்கு வலைவீச்சு சாலையோர மரத்தில் பைக் மோதி தொழிலாளி பலி

ஜெயங்கொண்டம், டிச. 31: ஜெயங்கொண்டம் அருகே சாலையோர மரத்தில் பைக் மோதி சம்பவ இடத்திலேயே கூலி தொழிலாளி பலியானார். ஜெயங்கொண்டம் அருகே உள்ள கூவத்தூர் தோப்பு தெருவை சேர்ந்த கனகராயர் மகன் பிரவீன் ராஜ் (19). கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று அகினேஸ்புரத்தில் உள்ள தனது நண்பரை பார்க்க பைக்கில் பிரவீன் ராஜ் சென்றார். அகினேஸ்புரம் துவக்கப்பள்ளி அருகே உள்ள வளைவில் திரும்பியபோது எதிரே சாலையோரத்தில் இருந்த இலந்தை மரத்தில் பைக் மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த தகவல் கிடைத்ததும் ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் சம்பவ இடத்துக்கு சென்று பிரவீன் ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: