ஸ்ரீபெரும்புதூர், டிச.13: ஸ்ரீபெரும்புதூர் அருகே மணிமங்கலம், காந்தி நகர், 5வது தெருவை சேர்ந்தவர் மதியழகன். இவரது மகன் ஜோதி பிரகாஷ் (16). படப்பை அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தான். நேற்று முன்தினம் ஜோதி பிரகாஷ், தனது நண்பன் காந்திநகரை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (19) என்பவருடன் பைக்கில் படப்பை - புஷ்பகிரி சாலையில் மணிமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அங்குள்ள மதுபான தொழிற்சாலை அருகே சென்றபோது, அடையாளம் தெரியாத லோடு வேன், பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயமடைந்தனர்.