கோவை, டிச.4: கோவை மாவட்டத்தில் ெடங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாகி வருகிறது. வைரஸ் காய்ச்சலால் சிறார் பாதிக்கப்படுவது அதிகரித்தும் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. கொசு உற்பத்தி அதிகரிக்க மழை நீர் தேக்கம் முக்கிய காரணமாக குறிப்பிடப்படுகிறது.
டயர் டியூப், பூந்ெதாட்டி, தேங்காய் தொட்டி, தாழ்வான பகுதி, குப்பை தொட்டிகளில் கொசுக்கள் அதிகமாக இருக்கிறது. தினமும் மழை நீர் தேக்கத்தை அகற்றவேண்டும். அப்போது தான் கொசு புழு (லார்வா) உற்பத்தியை தடுக்க முடியும். ஒரு கொசு 100க்கும் மேற்பட்ட முட்டையிட்டு லார்வா உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.