நெல்லை, நவ. 20: நாகலாபுரத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் நடந்தது. நாகலாபுரம் தியாகி இம்மானுவேல் சேகரர் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம், நாகலாபுரம் ஆரம்ப சுகாதார நிலைய சித்த பிரிவு சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் நடந்தது. நாகலாபுரம் காவல் நிலைய ஏட்டு நாராயணன் தலைமை வகித்தார். டாக்டர் விஜயலதா முன்னிலை வகித்தார். சங்கத்தலைவர் செண்பகக்கனி, செயலாளர் ஜெயமுருகன், பொருளாளர் முத்துப்பாண்டி, துணைத்தலைவர் கண்ணன், துணைச் செயலாளர் ஜெயக்குமார், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பாலமுருகன், குருநாதன், உமாநாத், மாரியப்பன், வேலுச்சாமி, மற்றும் சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர். பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.