அரியலூர், நவ. 12: அரியலூர் மின்நகர் பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை பணியை கலெக்டர் ரத்னா ஆய்வு செய்தார்.அரியலூர் மாவட்டத்தில் ஊராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை, தூய்மை பணிகள் நடந்து வருவதை கலெக்டர் ரத்னா ஆய்வு செய்தார். அரியலூர் மின்நகர் பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் மற்றும் தூய்மையான குடிநீர் வழங்கப்படுவதையும், வீடு வீடாகவும், திறந்த வெளிகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர் கலெக்டர் ரத்னா கூறியதாவது: அரியலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. மேலும் பொதுமக்கள் மழை காலங்களில் குடிநீரை காய்ச்சி பருக வேண்டும். சுற்றுப்புறங்களில் மழைநீர் தேங்காமலும், நீர்நிலைகளில் குழந்தைகளை குளிக்க அனுப்பாமல் பாதுகாத்து கொள்ள வேண்டும்.