திருப்போரூர், நவ.7: திருப்போரூர் ஒன்றியம் நெல்லிக்குப்பம் ஊராட்சியில் 3,500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த ஊராட்சி, பழைய மாமல்லபுரம் சாலையையொட்டி அமைந்துள்ளதாலும், நல்ல நீர்வளம், அமைதியான சூழல் உள்ள கிராம பகுதியாக இருப்பதாலும் இங்கு ஏராளமான வீட்டு மனைப்பிரிவுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் உருவாகி உள்ளன. மேலும், இங்கு மருத்துவக்கல்லூரி, 2 பெட்ரோல் நிலையங்கள், அரிசி ஆலைகள், வணிக வளாகங்கள், கலைக் கல்லூரி, அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவையும் உள்ளன. இங்கு கடந்த 1955ம் ஆண்டு அப்போதைய மத்திய அமைச்சர் ஓ.வி.அளகேசனால், மின் இணைப்பு கொண்டு வரப்பட்டு, வினியோகம் செய்யப்பட்டது.அப்போது, அமைக்கப்பட்ட மின் கம்பங்கள் இன்றும் நிலைத்து நிற்கின்றன. இருப்பினும், வயல்வெளி மற்றும் கால்வாய்களை ஒட்டி அமைக்கப்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன.