சிவகங்கை, நவ.5: சிவகங்கை கலெக்டர் அலுவலக பகுதியில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாய் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். சிவகங்கை கடந்த 1985ம் ஆண்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. மாவட்டத்திற்கான கலெக்டர் அலுவலகம் திருப்பத்தூர் சாலையில் அமைக்கப்பட்டு கடந்த 1988ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் அலுவலகம், எஸ்பி அலுவலகம், கல்வி, மின்வாரியம், வனம், கருவூலம், தொழில் மையம், வேளாண் மையம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலகங்கள் உள்ளன. கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் அரசு குடியிருப்புகள் உள்ளன. மஜீத் ரோடு பகுதியில் இருந்து ஆர்டிஓ அலுவலகம் வழி கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலை, புதூர் செல்லும் சாலை, சி, ஏ பிளாக் குடியிருப்புகள் செல்லும் சாலை உள்பட கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் உள்ள பல்வேறு சாலைகள் குண்டும், குழியுமாய் உள்ளன.