திருப்புவனம், நவ.5: திருப்புவனத்தில் பலத்த மழையின் காரணமாக வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன. தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து பரவலாக மழை பெய்து வருகிறது. சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
திருப்புவனம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் மாலையில் திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். விவசாயப் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.