ஈரோடு, நவ. 5: ஈரோட்டில் வஉசி வீதியில் உள்ள மாநகராட்சி குப்பை சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வீசும் கடும் துர்நாற்றத்தால் அப்பகுதி முழுவதும் கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட 40வது வார்டு சூரம்பட்டி வ.உ.சி வீதியில் மாநகராட்சி குப்பை சுத்திகரிப்பு நிலையம் (உரக்கிடங்கு) அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் இம்மையத்திற்கு கொண்டு வந்து தரம் பிரித்து உரங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. குப்பைகளில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் காரணமாக, அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இது தொடர்பாக பலமுறை போராட்டம் நடத்தியும் மாநகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் இது குறித்து நேற்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில் மனு அளித்தனர். பின்னர், அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது: