கோவை,அக்.27 கோவை சூலூர் அருகே செட்டிபாளையம் சாலையில் உள்ள சித்தநாயக்கன்பாளையத்தில் தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகம் அருகே பேருந்து நிறுத்தம் ஒன்று உள்ளது. இந்த பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் பயணிகள் சாலையோரத்தில்தான் பேருந்துக்காக காத்திருக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் நேற்று காலை அங்கு அப்பகுதியை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 3 பேர் பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது, அந்த வழியே அதிவேகமாக வந்த டேங்கர் லாரி ஒன்று, பேருந்து நிறுத்தத்தில் நின்றிருத்த அவர்கள் மீது மோதும் வகையில் வந்தது.