கோவை, அக்.15: கோவை சூலூர் வட்டாரத்தில் 3 பவுண்டரி நிறுவனங்களில் இருந்து மாசு ஏற்படுத்தும் கழிவுகளை குவிப்பதாக பொதுமக்கள் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினருக்கு புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரின் நேற்று பவுண்டரி நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் காஸ்டிங் கழிவுகள் வெளியேற்றப்பட்ட இடம், கழிவு மணல் குவிக்கப்பட்ட இடம் போன்றவற்றை பார்வையிட்டு அதிகாரிகள் விசாரித்தனர். கழிவு கொட்டப்பட்ட இடத்தில் நிலத்தடி நீர் மாசுபட்டிருப்பதாகவும், நிலத்தில் செடி, புற்கள் வளராமல் இருப்பதாகவும் தெரியவந்தது.