காஞ்சிபுரம், அக். 15: காஞ்சிபுரம் மாவட்டம் அய்யங்கார்குளம் பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் இனமக்கள் வீட்டுமனைப்பட்டா கேட்டு மாவட்ட கலெக்டர் பொன்னையாவிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது, “காஞ்சிபுரம் மாவட்டம், அய்யங்கார்குளத்தில் மீனவர் குடியிருப்பு பின்புறம் சுமார் 10 குடும்பங்கள் கூரைவீடு கட்டி வசித்து வருகிறோம். நாங்கள் குடியிருக்கும் இடத்திற்கு இதுவரை பட்டா வழங்கவில்லை. பட்டா இல்லாததால் அடிப்படை வசதிகள் இதுவரை ஏதும் செய்துதரப்படவில்லை. மின் இணைப்பு இல்லாமலும், தெருவிளக்கு இல்லாமலும், குடிநீர் வசதி இன்றியும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம்.