சிதம்பரம், அக். 10: சிதம்பரம் நகரில் உள்ள அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்துதல் தொடர்பாக கட்டிட பொறியாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, சிதம்பரம் நகராட்சி ஆணையாளர் சுரேந்திரஷா தலைமை வகித்து பேசுகையில், சிதம்பரம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில், 266 தெருக்களில் 13 ஆயிரத்து 940 வீடுகள் உள்ளது. சிதம்பரம் நகராட்சி கட்டிட பொறியாளர் சங்கத்துடன் இணைந்து இந்த வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்துதல், ஏற்கனவே மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உள்ள வீடுகளில் அதனை புதுப்பித்தல் குறித்து ஆய்வு பணி நடைபெற உள்ளது.