தூத்துக்குடி, அக். 9: தூத்துக்குடி டி.சவேரியார்புரத்தை சேர்ந்தவர் கருணாநிதி என்ற குட்டி (50). இவர், எட்டயபுரம் ரோட்டில் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். இவரது ஒர்க்ஷாப்புக்குள் நுழைந்த கோவில்பட்டியை சேர்ந்த முத்துசெல்வி(28), காளியப்பன் மனைவி முத்துலட்சுமி(20), சின்னத்தம்பி மனைவி லட்சுமி(23) ஆகியோர், அங்கிருந்த ஷேர் ஆட்டோ டயர் மற்றும் கியர் பாக்சை திருடி உள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் மத்திய பாகம் போலீசார், வழக்கு பதிந்து 3 பெண்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.