புகழூர் காவிரி ஆற்றில் கதவணை கட்டும் பணி குறித்து அதிகாரிகள் ஆய்வு

கரூர், செப். 24: காவிரியாற்றில் கதவணை கட்டுவது குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.புகழூர் காவிரியாற்றில் கதவணை கட்டப்பட உள்ளது. இது குறித்து தமிழக நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இதன் முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, திட்ட உருவாக்கம் தலைமை பொறியாளர் பொன்ராஜ், திருச்சி மண்டல பொறியாளர் ராமமூர்த்தி ஆகியோர் ஆய்வு செய்தனர். புகழூர் காவிரியாற்றில் ரூ.490 கோடியில் அமைய உள்ள கதவணைக்கான திட்டம் தயாரிக்கப்பட்டு அந்த திட்டம் குறித்து தல ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அடுத்து கதவணை கட்டுமானம் குறித்து இறுதி கட்ட அறிக்கையை குழு அரசுக்கு அளிக்கும் தொடர்ந்து கதவணை கட்டுமானத்திற்கான டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்,,

நெரூர்- உன்னியூர் இடையே காவிரியாற்றில் கதவணை கட்டும் உத்தேசம் உள்ளது. அதனால் இப்பகுதியிலும் இதேபோன்று அதிகாரிகள் தல ஆய்வினை நடத்தினர்.

Related Stories: