ஈரோடு, செப். 11: ஈரோடு மண்டலத்திற்குட்பட்ட மின் வாரிய அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான குறைகேட்பு கூட்டம் 18ம் தேதி ஈரோட்டில் நடக்கிறது.இதுகுறித்து ஈரோடு மண்டல தலைமை பொறியாளர் சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஈரோடு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள மின்வாரிய அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர், பணியாளர்களின் குறைகளை கேட்கவும், மனுக்களை பெற்று, உடனடியாக தீர்த்து வைக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.