நாசரேத், செப்.11: நாசரேத் புனித லூக்கா சமுதாய கல்லூரியில் மனிதநேய மேம்பாட்டு தினவிழா நடந்தது. போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாயசாந்தி தலைமை வகித்தார். ஆசிரியை ஸ்வீட்லின் ஜெபம் செய்தார். கல்லூரி இயக்குநர் பேராசிரியர் ஜெயச்சந்திரன் வரவேற்றார். தூத்துக்குடி மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகின் திட்ட மேலாளர் அமலவளன் வாழ்த்தி பேசினார்.