கும்பகோணம், செப். 10: அரசாணை 145யை உடனடியாக திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணம் காந்தி பூங்கா முன் ஜாக்டோ-ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஜாக்டோ ஜியோ பொறுப்பாளர்கள் இதயதுல்லா. இளையராஜா, அறிவுடைய நம்பி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் அரசாணை 145யை உடனடியாக திரும்ப பெற வேண்டும். காவல்துறையால் புனையப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். மாநில ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியர், ஓய்வுபெறும் நாளில் தற்காலிக பணி நீக்கம் செய்ததை ரத்து செய்ய வேண்டும்.