அரியலூர், செப். 10: செந்துறை பகுதி மக்களின் அடிப்படை வசதிகளை செய்ய வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளை கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி செந்துறை பேருந்து நிலையத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக மாவட்ட செயலாளர் சிவசங்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்பாட்டாத்தில் விபத்துகளை குறைக்கவும், கனரக வாகன நெருக்கடிகளை சமாளிக்கவும் செந்துறையில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும். செந்துறை - அரியலூர் நெடுஞ்சாயில் அதிக சிமெண்ட் ஆலை கனரக வாகனங்கள் செல்வதால் ஏற்படும் விபத்துகளை தடுக்க நான்கு வழிச்சாலை அமைக்க வேண்டும். செந்துறை அரசு மருத்துவமனையில் 6 மருத்துவர்கள் இருக்க வேண்டிய இடத்துக்க்கு இருவர் மட்டுமே உள்ளனர். இதனால் நோயாளிகளை சரிவர நோயாளிகளை கவனிக்க இயவில்லை. எனவே உடனே கூடுதல் மருத்துவர்களை நியமிக்கவும், பிரேத பரிசோதனை கூடத்தை செயல்படுத்த வேண்டும்.