தூத்துக்குடி,ஆக.22: தூத்துக்குடியில் வரும் 25ம் தேதி போலீஸ், தீயணைப்பு, சிறைத்துறை காவலர்களுக்கான எழுத்து தேர்வு நடக்கிறது. 2019-ம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த இரண்டாம் நிலைகாவலர், சிறைக்காவலர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கான எழுத்துதேர்வு தூத்துக்குடியில் 25ம் தேதி நடக்கிறது. இத்தேர்வுகள் தூத்துக்குடியில் பிஎம்சி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, காமராஜர் கல்லூரி, காரப்பேட்டை ஆண்கள் பள்ளி, புனித மேரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வ.உ.சி கல்லூரி வளாகம், புனித தாமஸ் மேல்நிலைப் பள்ளி, புனித மேரி மகளிர் கல்லூரி, ஆகிய 8 தேர்வு மையங்களில் நடக்கிறது. இத்தேர்வுகளை எழுத மொத்தம் 9599 விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு இந்த எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. அனைத்து விண்ணப்பதாரர்களும் எழுத்துத் தேர்வுக்கான அழைப்புக்கடிதம் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.