வேலூர், ஆக.22:ேவலூர் புதிய பஸ் நிலையத்தில் பிரேக் பிடிக்காத அரசு பஸ் மோதியதில் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்ததுடன் டவுன் பஸ் மீதும் மோதியது. இதைப்பார்த்த பயணிகள் அலறி ஓடினர்.வேலூர் மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு பஸ்களில் பெரும்பாலும் ஆயுட்காலம் முடிந்து ஓட்டை உடைசலாக இயக்கப்பட்டு வருகிறது. இதனால் அரசு பஸ்கள் அடிக்கடி பழுதாகி நடுவழிகளில் நின்று விடுகிறது. இதனால் பயணிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் அரசு பஸ்களில் மழை காலத்தில் மழைநீர் பஸ்சுக்குள் வருவதால் பயணிகள் பஸ்சுக்குள் குடை பிடித்தபடி சென்று வருகின்றனர்.இந்நிலையில், வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து கடலூர் செல்லும் அரசு பஸ் நேற்று காலை பயணிகளுடன் புறப்பட்டது. பஸ்நிலையத்தில் இருந்து வளைவில் பஸ்ைச டிரைவர் திருப்பியபோது, அங்குள்ள பஸ் பிரேக் பிடிக்காமல் திடீரென அங்கிருந்த கட்டண கழிப்பறை சுவற்றின் மீது மோதியது. இதில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.