கொடுக்கல் வாங்கல் தகராறில் ஒருவர் கைது

தோகைமலை,ஆக.20: தோகைமலை அருகே கூடலூர் ஊராட்சி திருமலைரெட்டிபட்டியை சேர்ந்தவர் தமிழ்மணி(40). இதேபோல் அதே ஊரில் உள்ள இந்திரா காலனியை சேர்ந்தவர் மாணிக்கம்(45). இதில் தமிழ்மணியின் அண்ணனுக்கு மாணிக்கம் பணம் தரவேண்டி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று திருமலைரெட்டிபட்டியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி அருகே மாணிக்கம் இருந்து உள்ளார். அப்போது அங்கு வந்த தமிழ்மணி தனது அண்ணனுக்கு எப்போது பணம் தருகிறாய் என்று கேட்டு உள்ளார். இதில் இருவருக்கும் தகராறு முற்றிய நிலையில் தமிழ்மணியை தகாத வார்த்தைகளால் திட்டி பற்களால் கடித்து காயப்படுத்தி உள்ளார். இதுகுறித்து தோகைமலை காவல்நிலையத்தில் தமிழ்மணி புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாணிக்கத்தை கைது செய்தனர்.

Related Stories: