பெ.நா.பாளையம், ஆக.14 : பெரியநாயக்கன்பாளையம் அடுத்து உள்ள வீரபாண்டி பிரிவில் புனித ஜான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இலவச கண், பல் மருத்துவ முகாம் நேற்று நடந்தது. முகாமை பள்ளியின் தாளாளர் அரவிந்தன் தொடங்கி வைத்தார்.
அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் ஸ்ரீ மினு பல் மருத்துவமனையும் இணைந்து நடத்திய முகாமில் மாணவ மாணவிகள் 900 பேருக்கு கண் மற்றும் பல் பரிசோதனை செய்யப்பட்டது. மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். பள்ளி வளாகத்திலுள்ள காய்கறி தோட்டத்தில் இயற்கை முறையில் விளைவித்த பொருட்களை பொதுமக்கள் பார்வையிட்டனர். வீடுகளில் மாடி தோட்டம் வளர்ப்பது குறித்து பெற்றோர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் விளக்கமளிக்கப்பட்டது.