கோவை, ஜூலை 18: கோவை காந்தி பார்க் பகுதியில் 2.5 கோடி ரூபாய் மதிப்பில் செயற்கை நீர் ஊற்றுகளுடன் காந்தி பூங்கா சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பூங்கா அடுத்த மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோவை மாநகராட்சி 24 வார்டு பகுதிக்குட்பட்ட காந்தி பார்க் பகுதியில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது காந்தி பூங்கா. கோவை மாநகர மக்கள் விடுமுறை நாட்களுக்கு கோவை வ.உ.சி பூங்காவிற்கு அடுத்து காந்தி பூங்காவிற்கு வருகின்றனர். இந்நிலையில் காந்தி பூங்காவை சீரமைக்க மத்திய அரசின் அம்ரூத திட்டத்தின் கீழ் 2.5 கோடி செலவில் மாநகராட்சி சார்பாக அங்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. புதிதாக கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளது.