கோவை, ஜூலை 18: தமிழகத்தில் தோட்டக்கலைத்துறையில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி இயக்கம், தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் மானாவாரி அபிவிருத்தி திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கு ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. நடப்பாண்டு தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் காய்கறிகள் சாகுபடி பரப்பளவை அதிகரிக்க ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 100 எக்டர் வரை அதிகரிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ஒரு விவசாயிக்கு எக்டருக்கு ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக விவசாயி ஒருவருக்கு 1 ஹெக்டருக்கு மானியம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சின்னவெங்காயம் சாகுபடி பரப்பளவையுலம் 50 எக்டர் அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.