கடலூர், ஜூலை 18: கடலூர் மஞ்சக்குப்பம் குண்டு உப்பலவாடி மெயின்ரோடு பகுதியில் அமைந்துள்ள பத்மாவதி நகர் குடியிருப்போர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம் மற்றும் சங்கத்தின் ஓராண்டு நிறைவு விழா நடைபெற்றது.
சங்க தலைவர் கலாநிதி தலைமை தாங்கினார். இணை செயலர் மணிமாறன் வரவேற்றார். செயலாளர் சுந்தரமூர்த்தி, சங்க செயல்பாடுகள் குறித்து உரை நிகழ்த்தினார். பொருளாளர் ஜெயக்குமார் வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்தார்.