நெல்லை, ஜூலை 12: பன்னம்பாறையில் உள்ள மருதமலை அய்யனார், பேச்சியம்மன், சுடலைமாடசாமி கோயில் கொடை விழா நேற்று துவங்கியது. இதையொட்டி தீர்த்தம் எடுத்து வருதல், தொடர்ந்து கும்பாபிஷேகம், குடியழைப்பு, அலங்கார பூஜை, சாஸ்தா பிறப்பு, காப்பு கட்டுதல் நடந்தது. இன்று (12ம் தேதி) காலை 6 மணிக்கு வடக்கு பன்னம்பாறை முத்தாரம்மன் கோயிலில் இருந்து பால்குடம் ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. காலை10 மணிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை, நண்பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை, அன்னதானம் நடக்கிறது. மாலை நையாண்டி மேளம், சிற்றுண்டி வழங்கல், இரவு 10 மணிக்கு அலங்கார பூஜை, தொடர்ந்து கரகாட்டம், குறவன், குறத்தி ஆட்டம் நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு சாமக்கொடை, படப்பு பூஜை, வாணவேடிக்கை நடக்கிறது.
ஏற்பாடுகளை நிர்வாக தலைவர் சுடலைமுத்து, ரங்கசாமி, சுடலை, ஆண்டியா மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.