அரக்கோணம், ஜூலை 11: அரக்கோணம் அருகே 7 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக வேலை செய்த 14 பேரை அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர். வேலூர் மாவட்டம், அரக்கோணம் அடுத்த பருவமேடு பகுதியில் காஞ்சிபுரம் அடுத்த கூரம் பகுதியை சேர்ந்த பிரசாத் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மரம் வெட்டும் தொழிலில் சிலர் கொத்தடிமைகளாக ஈடுபடுவதாக கலெக்டர் சண்முகசுந்தரத்திற்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில், சப்-கலெக்டர் இளம்பகவத், தாசில்தார் ஜெயகுமார் மற்றும் கொத்தடிமைகள் விடுவிக்கப்பட்ட மக்களுக்கான மறுவாழ்வு சங்க ஒருங்கிணைப்பாளர் சம்பத் ஆகியோர் நேற்று சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.