அரியலூர், ஜூன் 25: அரியலூர் பகுதியில் நேற்று மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.அரியலூர் மாவட்டத்தில் கடந்த 3 மாதமாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். மேலும் கோடை வெயிலால் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அரியலூர் பகுதியில் கடந்த சில நாட்களாக கருமேகங்கள் திரண்டு மழை வருவதுபோல் இருந்தது. ஆனால் மழை வராமல் மக்களை ஏமாற்றியது.