ஆலந்தூர், ஜூன் 25: உள்ளகரம் - மேடவாக்கம் சாலையில் உள்ள மின் கம்பங்களில் தனியார் நிறுவனங்கள் சார்பில் கட்டப்படும் விளம்பர பேனர்கள் உடைந்து, மரக்கட்டைகளை ஆபத்தான முறையில் தொங்குகிறது. அதனை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். உள்ளகரம் - மேடவாக்கம் சாலை முக்கிய போக்குவரத்து தடமாக உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இச்சாலையில் செல்வதால், எப்போதும் பரபரப்பாக காணப்படும். இதில், ஆலந்தூர் சாலையில் 100க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் உள்ளன. இந்த மின் கம்பங்களில் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள், வியாபார நிறுவனங்களை சேர்ந்தவர்கள் தங்களது விளம்பர தட்டிகள் மற்றும் பேனர்களை இரவோடு இரவாக கட்டி தொங்க விடுகின்றனர்.