புளியங்குடி, ஜூன் 25: புளியங்குடியில் மின்விளக்கு வசதி இல்லாததால், ஏடிஎம் மையம் இருளில் மூழ்கி கிடக்கிறது. இதனால் இரவு நேரங்களில் பணம் எடுக்க செல்ல வாடிக்கையாளர்கள் அச்சமடைகின்றனர்.
புளியங்குடி நகரின் மைய பகுதியில் தேசிய உடமையாக்கப்பட்ட வங்கியின் கிளையும், அதன் ஏடிஎம் மையமும் உள்ளது. 50 ஆண்டுகளுக்கு மேலாக இவ்வங்கி இயங்கி வருகிறது. பல்லாயிக்கணக்கான வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்துள்ளனர். இவர்கள் அனைவரும் தங்களது பணத்தை எடுப்பதற்கு அங்கிருக்கும் ஏடிஎம் மையத்தை மட்டுமே நாட வேண்டி உள்ளது. ஆனால் இம்மையத்தின் முன் பகுதியில் ஒரு சிறிய மின்விளக்கு கூட இல்லை.