உத்திரமேரூர், ஜூன் 21: உத்திரமேரூர் அடுத்த பெருநகர் கிராமத்தில் உத்திரமேரூர் ஒன்றிய திமுக சார்பில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா மற்றும் மக்களவை தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக் கூட்டம் நேற்று நடந்தது. உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். ஒன்றிய துணை செயலாளர் ருத்ரகோட்டி, இலக்கிய அணி நிர்வாகி முனிரத்தினம், ராஜேந்திரன், தயாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் வடிவேல் வரவேற்றார்.